தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Monday, March 5, 2012

0 எங்கே செல்கிறோம் நாம்..

ஒழுக்கம், பெரியோரை மதிக்கும் பண்பு, நன்னடத்தை இவையெல்லாம் சிறிது சிறிதாக சமூகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது.

பெரியோர்களின் அறிவுரை நமது இளைய சமுதாயத்திற்கு கடும் நஞ்சாகி கசக்கிறது.

நானே ராஜா நானே மந்திரி என்னும் மனப்போக்கு தற்பொழுது இளைய தலைமுறையினரை ஆட்டுவிக்கிறது!

சென்னையில் பஸ் கொஞ்சம் கூட்டமாகவும் அதில் இரண்டு மூன்று வயதுப் பெண்கள் இருந்துவிட்டால் போதும் இளைஞர்கள் ஒரு பஸ் நிறுத்தத்திலிருந்து அடுத்த பஸ் நிருத்தம் வரை ஓடிடிடிடிடி வந்து ஏறாமல் ஏற வேண்டும் என்பது இளைஞர்கள் தங்களுக்குள்ளாகவே எழுதி வைத்திக் கொண்டிருக்கும் விதி.

இதை யாரவது பெரியவர் "ஏம்பா உள்ளேதான் இவ்வளவு இடமிருக்கே, உள்ளே வாங்களேன்" கண்டித்தால் போதும்,

"யோவ் பெருசு வேலையைப் பாப்பியா? சும்மா அட்வைஸ் பண்ண வந்துட்டே" என்று மரியாதையாக் கூறுவதை காணமுடியும்.

இளம் கன்று பயம் அறியாதுதானே.

ஆனால், ஏதேனும் விபத்து நேர்ந்து கை கால் இழந்தால், பிறகு ஆயுளுக்கும் அதன் வடு போகாது என்பது பாவம் அவர்களுக்கு விளங்காத ஒன்று. அவர்கள் இம்மண்ணில் வாழும் காலமெல்லாம் அவர்கள் செய்த காரியத்தை எண்ணி அது வருந்த வைத்து விடும் என்பது மட்டும் மெய்.


9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒரு ஆசிரியரைக் கொலை செய்து விட்டு, ஒரு ஹிந்திப் படத்தைப் பார்த்துதான் நான் அதுபோல் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியரையே மாணவன் கொல்லத் துணிகிறான் என்றால் அவன் தன் சிந்தையை எந்த அளவுக்கு கொடூரமாக தீட்டியிருக்கிறான் என்பது தெளிவாகும். அதற்கு திரைப்படமும் துணை போயிருக்கிறது.

எந்தளவிற்கு சினிமா போன்ற ஊடகக் கலாச்சார சீரழிவுகளினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு அது தூண்டியுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

சினிமாக்கள் பெண்களை இன்னும் போகப் பொருள் என்னும் அந்தஸ்திலேயே வைத்துள்ளது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

சின்னத்திரையோ வீட்டில் உள்ள பெண்களையெல்லாம் முட்டாளாக்கி அவர்களின் மனதில் விஷ விதையை நடுகிறது.

குடும்பத்தில் எவ்வாறு சண்டையிடலாம் என்பதை, தங்களுக்கு இதை விட்டால் வேறு கதியில்லை என்று இருக்கும் பெண்களுக்கு மிக நேர்த்தியாக சின்னத்திரை மெகா.. சிரியல்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறது.

சண்டை அதிகரித்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளும் அவலம் இனி அதிகரிக்கலாம். ஒரு காலத்தில் முதியோர் இல்லப் பற்றாக்குறை வந்தாலும் வரலாம்?

நமது பொன்னான நேரத்தை வாங்கிக் கொண்டு மிடீயாக்கள் நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கின்றன பார்த்தீர்களா?.


காதல், காமம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் என கருத்துச் சுதந்திரப் போர்வையினூடே சமூகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை மிக எளிதாக இவற்றை பந்தி வைக்கின்றன.

இதையே கண்களும் தேடித் தேடி அலைகிறது, டிவி ரிமோட் பட்டனும் தேய்கிறது. இதன் விளைவு என்னவாகும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பஸ்ஸில் பெண்களின் பகுதி ஆண்களின் பகுதி என்று வேலி போட்டுத் தடுக்க வேண்டிய காலத்தின் கோலத்தை பார்த்து நிலமையின் விபரீதத்தை விளங்கிக் கொள்ளலாம்..

பெற்றோர்களை நான் வேண்டுவது என்ன வென்றால் தயவு செய்து குழந்தைகளை டிவி சினிமா போன்ற கன்றாவிகளை பார்க்க விடாதீர்கள், நீங்களும் முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளின் மனதில், இறைவன் நம்மை எப்போதும் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்னும் எண்ணத்தை விதையுங்கள், தாங்களும் இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள், இதன் மூலமே நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment